ஆண்ட்ரியா ஜெரிமியா இசையமத்து பாடல் எழுதி பாடிய இத்தனிப்பாடல் "தரமணி" படத்தில் இடம் பெறும் பாடல் அல்ல. அவர் படத்திற்காக இசையமைத்த பாடலும் அல்ல.

தரமணி படப்பிடிப்பின் போது ஆண்ட்ரியாவின் கைப்பேசியில் இருந்த பல இசை அமைப்புகளை கேட்க நேர்ந்தது. அதில் ஒரு இசை அமைப்பானது அந்த ரயில் நிலையத்தின் ஆன்மாவை பிரதிபலிப்பதாய்த் தோன்றியது.

ஆங்கில வரிகளை எழுதி அவரே பாடியிருந்தார். பின்னணிப் பாடகியாக அறிந்திருந்த ஆண்ட்ரியாவின் இசைப்புலமையும் இசை ஆர்வமும் ஆச்சரியப்படவைத்தது. படப்பிடிப்பின் இடையேஇந்தப்பாடலை படமாக்கினோம். வெளியிடும் நோக்கில் எடுக்காமல் பயிற்சிக்காய் எடுத்த இந்தப்பாடலை "தரமணி" க்காக வெளியிடலாம் என்று ஆண்ட்ரியா சில நாட்கள் கழித்துச் சொன்னது "தரமணி" திரைப்படத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டக்கூடியதாய் இருந்தது.

ஆக இப்பாடல் தரமணி படத்தோடு நேரடியான தொடர்பில் இல்லாவிட்டாலும் தரமணியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதே. இப்பாடலை வெளியிடலாம் என்று ஊக்குவித்த யுவனின்
கலைமனதை எப்போதும் போல் நாங்கள் காதலிக்கிறோம்.

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்.

0 comments:

Post a Comment

slider


Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa
 
Top